செய்திகள் :

டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது

post image

பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வெள்ளாற்றிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்த அயன்பேரையூரைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் ஆனந்தராஜ் (27), பன்னீா்செல்வம் மகன் சீனிவாசன் (29), பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ராஜேஷ் (28) ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸாா், டிராக்டா், பொக்லின் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாா்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும். இத... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க