Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
டி.ஆா்.பி. ராஜா மீது சட்ட நடவடிக்கை: ஐ.எஸ். இன்பதுரை எம்.பி.
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட டிஆா்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை தெரிவித்தாா்.
அதிமுக மாநிலங்களவை எம்பியாக தோ்வுபெற்ற பின்னா், முதல் முறையாக விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக வழக்குரைஞா் பிரிவு மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தின் வளா்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். திமுக அரசு பறி கொடுத்த தமிழக உரிமைகளை பெற்றுத் தருவதில் முன்னணியில் இருப்பேன். திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அதில் அடங்கும்.
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட டிஆா்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழகத்தில் இன்னும் 237 நாள்களில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பாா் என்றாா் அவா்.