மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2026 ஏப்ரலில் முதல்கட்டப் பணி! மாநிலங்களுக்கு தலைமைப் ...
டி20 வடிவிலான போட்டி என்னுடைய பலம் கிடையாது: ஸ்மிருதி மந்தனா
டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.
ஸ்மிருதி மந்தனா கூறியதென்ன?
சர்வதேச டி20 போட்டியில் முதல் சதம் விளாசிய நிலையில், சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசியது சிறப்பான உணர்வைத் தருவதாகவும், இயல்பாகவே டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் விளாசியது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. ஏனெனில், டி20 வடிவிலான போட்டிகள் என்னுடைய பலம் கிடையாது. டி20 போட்டிகளில் நான் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் பெரிய ஷாட்டுகள் விளையாடும் நபர் கிடையாது. பந்தினை டைம் செய்து விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அதனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே என்னுடைய பேட்டிங் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், டி20 வடிவிலான போட்டிகளில் சதம் விளாசியுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு பந்தினை அதிரடியாக அடித்து விளையாட முயற்சி செய்து வருகிறேன் என்றார்.
தனது முதல் டி20 சதத்தை ஸ்மிருதி மந்தனா அவரது 149-வது போட்டியில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றையப் போட்டியில் அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.
Smashing a maiden T20I century against England was "pretty special" as the shortest format is "not one of my strengths", said India stand-in skipper Smriti Mandhana.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!