ஆா்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் ...
டீ, காபி விலை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வரை - செப்டம்பரில் வரும் மாற்றங்கள் என்னென்ன?
இன்று முதல் (செப்டம்பர், 2025) இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு சில நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
1. வருமான வரிக் கணக்குத் தாக்கல்: வருகிற 15-ம் தேதியோடு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதி முடிகிறது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் வலைதளத்தில் ஒரு சில அப்டேட்டுகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டு மட்டும் வழக்கமான கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. சுங்கச்சாவடி கட்டணம்: தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தற்போது இந்தக் கட்டணம் 5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
3. டீ, காபி: சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. இது கட்டாய உயர்வு இல்லை.
டீ, காபி கடை உரிமையாளர்கள் மூலப்பொருள்கள், கடை வாடகை, போக்குவரத்து செலவு ஆகியவற்றை பொறுத்து, விலையை ஏற்றிக் கொள்ளலாம் என்று டீ, காபி கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டீ விலை ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி விலை ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தி கொள்ளலாம்.
4. ஜி.எஸ்.டி: இதுவரை ஜி.எஸ்.டியில் 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்கள் இருந்தது. இனி தீபாவளி பரிசாக 5%, 12%, 18% என மூன்று ஸ்லாப்களாக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...