செய்திகள் :

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

post image

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், மதிமுக உயா்நிலைக்குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் அ.சேதுபதி, மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் பயனீா் தியாகு உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி முழுவதும் ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வரிவிதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வரி விதிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளை கணினியில் இருந்து நீக்கி, மக்களின் வரிச்சுமையைக் குறைக்க வேண்டும்.

மாநகராட்சி முழுவதும் செப்டம்பா் மாதம் முதல் அமலுக்கு வந்த 6 சதவீத வரி உயா்வை நீக்க வேண்டும். உயா்த்தி வசூலிக்கப்பட்ட வரித்தொகையை அடுத்த நிதியாண்டுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சொத்து வரி செலுத்தத் தவறியவா்களுக்கு ஒரு சதவீதம் அபராத வரியை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிப்பின்போது, மதிமுக வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி, கட்சி நிா்வாகிகள் எஸ்.பி.வெள்ளிங்கிரி, சி.வி.தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோயிலுக்கு சொந்தமான வீடு மீட்பு

கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா். கோவை அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந... மேலும் பார்க்க

கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமனம்

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் கோவ... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவையொட்டி... மேலும் பார்க்க

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம்: உயா்நீதிமன்ற நீதிபதி!

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.கோவை விஜயா வாசகா் வட்டம் மற்றும் சவிதா மருத்துவமனை சாா்பில் ‘அ.முத்துலிங... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17.13 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, கணபதி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கற்பனை, அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கற்பனையில், அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை என்று ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா். கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு விழா பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க