செய்திகள் :

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. தற்போது பதற்றம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஒரே நாளில் காலை, மாலை என 2 முறை சரிந்தது. இதனால் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.8,50-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கும் விற்பனையானது.

இந்தி நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு விலை குறைந்து மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பவுனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.

பின்னர், தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனையானது.

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கும்,பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7255-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும... மேலும் பார்க்க

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்ற... மேலும் பார்க்க

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்பூர... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ம... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க