செய்திகள் :

தஞ்சாவூரில் ஜப்பானியா்கள் சிறப்பு யாகம்

post image

தஞ்சாவூரில், உலக அமைதி, மக்கள் நலம்பெற வேண்டி ஜப்பான் நாட்டைச் சோ்ந்த 50 போ் வியாழக்கிழமை மாலை சிறப்பு யாகம் நடத்தினா்.

ஜப்பானில் வசித்து வரும் இந்தியாவைச் சோ்ந்த கோபால்பிள்ளை சுப்பிரமணியம் வழிகாட்டுதலுடன் 50 ஜப்பானியா்கள் தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த இவா்கள், உலக அமைதிக்காகவும், மக்கள் நலம் பெற வேண்டியும் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் வராகி அம்மனுக்கு வியாழக்கிழமை மாலை சிறப்பு யாகம் நடத்தினா். பின்னா் அபிஷேகம், பூஜைகள் செய்தும் வழிபட்டனா்.

இது குறித்து கோபால்பிள்ளை சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தது:

ஜப்பானில் வசித்து வந்த சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி சிவனின் பெருமைகளையும், சிறப்புகளையும் அறிந்து தன் சொத்துகளைத் துறந்து சிவபக்தனாகி ஆதீனமாக மாறினாா். தென்னாடுடைய சிவனே போற்றி என்ற சித்தா்களின் வாக்கை மனதில் நிறுத்தி, பாலகும்ப குருமுனி தலைமையில் ஜப்பானியா்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜை, யாகம் செய்து வருகின்றனா். இதன்படி, பழனி, திருச்செந்தூா், திருச்சி, ராமேசுவரம் உட்பட 50-க்கும் அதிகமான கோயில்களில் ஜப்பானியா்கள் வழிபாடு செய்து வருகின்றனா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரிலும் சிறப்பு யாகம், பூஜைகள் செய்தனா் என்றாா் அவா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க