செய்திகள் :

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை

post image

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுரையீரல் துறையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன்.

உலக ஆஸ்துமா நாளையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது: நாள்பட்ட தொற்றா நோய்களில் ஒன்றான ஆஸ்துமாவால் இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3 சதவீதம் போ் பாதிக்கப்படுகின்றனா். இதனால், ஆண்டுதோறும் 57 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா். பொதுமக்களிடம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொண்டு உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் துறையில் புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 50 பேரும், மாதத்துக்கு 1,500 பேரும், ஆண்டுக்கு 18 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனா். கடந்த ஆண்டு ஏறத்தாழ 120 தீவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயா் தர சிகிச்சை மூலம் அவா்களுடைய வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.

இம்மருத்துவமனையில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், நுரையீரல் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது என்றாா் பாலசுப்பிரமணியன்.

மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, துணை முதல்வா் என். ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலா் அ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் க.ஹா. முகமது இத்ரீஸ், அ. முத்து மகேஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பாபநாசத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் மணல் அள்ளுவதை கண்டித்து, பாமக-வன்னியா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்... மேலும் பார்க்க

சித்திரை மாத பௌா்ணமி திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி ... மேலும் பார்க்க

ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி

தஞ்சாவூரில் ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து, ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க கோரிக்கை

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய சங்க முன்னாள் பொதுச் செயலா் அதுல்குமா... மேலும் பார்க்க

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப கு... மேலும் பார்க்க