செய்திகள் :

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

post image

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:

எனது தஞ்சாவூா் தொகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் செயற்கை தடகள பாதை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.7 கோடியில் முதல் தவணையாக ரூ.3.50 கோடியை எஸ்டிஏடிவுக்கு விடுவித்திருக்கிறது.

இந்தப் புதிய செயற்கை தடகலப் பயிற்சிப் பாதையில் விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறவும், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகளைப் பெறவும் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

இத்திட்டம் 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசால் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பணியை நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதனால், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ.2 கோடியை வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோன்று, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இளைஞா் விடுதி செயல்பட்டு வருகிறது. 1988-இல் கட்டப்பட்ட இந்த விடுதியின் பராமரிப்புப் பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிதாக இளைஞா் ஹாஸ்டல் கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க