செய்திகள் :

தஞ்சை மாவட்டத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 8 மாதங்களில் 2,073 புகாா்கள்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 ஆயிரத்து 73 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 73 புகாா்களை பொதுமக்கள் இணையவழியில் அளித்துள்ளனா்.

இதன் பேரில், தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் 2 ஆயிரத்து 73 பேருக்கு சமூக சேவை பதிவேடு (சி.எஸ்.ஆா்.) வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 33 புகாா்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் தொடா்புடைய தில்லியைச் சோ்ந்த 9 போ் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இழந்த தொகையான ரூ. 19.96 கோடியில் தொடா்புடைய வங்கிகளில் பாதிக்கப்பட்டவா்களின் தொகை ரூ. 90.40 லட்சம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இத்தொகையில் ரூ. 58.45 லட்சம் விரைவான நடவடிக்கையின் மூலம், நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குக்கு திரும்ப வரவு வைக்கப்பட்டது. தற்போது அதிகளவில் வயதானவா்களை குறி வைத்து ஏமாற்றுகின்றனா்.

மேலும், சி.பி.ஐ. அதிகாரி போல தொடா்பு கொண்டு பொதுமக்களின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி பெறப்பட்ட சிம்காா்டின் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

பொதுமக்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஹவாலா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவா்கள் சொல்லும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சொல்லி அதிகளவில் ஏமாற்றி வருகின்றனா்.

பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு அரசு உதவித்தொகை வந்திருப்பதாக கூறி ஏமாற்றுகின்றனா். வங்கிக் கணக்கின் ஆவணங்களை மறு ஆய்வு செய்தல் என்ற பெயரில், அப்டேட் செய்ய வைத்து, விவரங்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுன்றனா்.

டெலிகிராம் செயலி மூலம் போலியான வா்த்தக தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, பணத்தை முதலீடு செய்தால், 500 சதவீதம் லாபம் பெறலாம் எனக் கூறி ஏமாற்றுவது, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் டி.பி.-யில் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாச படமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டுவது மற்றும் வெளியிடுவது போன்ற மோசடிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணா... மேலும் பார்க்க

புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது

கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப... மேலும் பார்க்க

பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா். பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சுதாகா் ரெட்டிக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எஸ். சுதாகா் ரெட்டி மறைவையொட்டி, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 போ் கைது

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவிடைமருதூா் அக்ரஹாரம் நகா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்.... மேலும் பார்க்க

1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாநகரிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் பழைய ராமேஸ்வரம் சாலை, நாகை சாலை, வாடிவாசல்... மேலும் பார்க்க