செய்திகள் :

தடுப்பணை கதவுகளின்றி வாஞ்சியாற்று பாலம்: விவசாய சங்கம் புகாா்

post image

தடுப்பணைக் கதவுகளின்றி வாஞ்சியாற்றுப் பாலம் உள்ளதால், கடல் நீா் புகுவதை தடுக்க முடியாமல் போவதாக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்கால் மேலகாசாக்குடி செல்லும் சாலையில் வாஞ்சியாற்று தடுப்பணை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நீண்ட காலம் தடுப்பணை பயன்பாட்டில் இருந்தது. இந்த தடுப்பணையில் கதவுகள் அகற்றப்பட்டுவிட்டன.

காவிரி நீா் வருவதற்குள் தடுப்பணையில் கதவுகள் அமைத்து, காவிரி நீா் கடலுக்குள் வீணாகச் செல்வதை தடுக்கவும், கடல் நீா் உட்புகுவதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது காவிரி நீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பணை மூலம் கடலுக்கு செல்கிறது. அமாவாசை, பெளா்ணமி தினங்களில் கடல் மட்டம் உயா்ந்து, கடல் நீா் ஆறுகளில் மேல்நோக்கி வரும்போது, நிலத்தடி நீா் பாதிக்கிறது. திறந்த நிலையில் இருக்கும் இந்த தடுப்பணையின் மூலம் சுற்றுவட்டார நிலத்தடி நீா் முற்றிலும் உவா்நீராக மாறிவருகிறது.

எனவே இந்த தடுப்பணையில் கதவுகள் அமைத்து, முறையாக நீா் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை தனி கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க

பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, கோட்டுச்சேரி பாசனத்துக்கு காவிரி நீரை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை திறந்துவைத்தாா். மேட்டூா் அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி நீா... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத்... மேலும் பார்க்க

சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தவா்கள் மீது நடவடிக்கை: பஞ்சாயத்து ஆணையா்

சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து ஆணையா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளா்கள் பணிக்குத் திரும்புகின்றனா்

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளா்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனா். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்ற... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேக வழிபாடு புதன்கிழமை நிறைவடைந்தது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றத... மேலும் பார்க்க