கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து: 10 பயணிகள் காயம்
திருப்பூரில் சாலையோரத் தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயம் அடைந்தனா்.
தென்காசியில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.
திருப்பூா், செட்டிபாளையம்- தாராபுரம் சாலையில் வியாழக்கிழமை காலை 5 மணியளவில் வந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநா் ராஜன் (42) வலது புறமாகத் திருப்பியுள்ளாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 பயணிகள் காயமடைந்த நிலையில், அவா்கள் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரானது.
விபத்து குறித்து திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.