செய்திகள் :

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

post image

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன.

குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை காலை ஆடுகள், கோழிகளை பட்டியில் இருந்து திறந்துவிட்டுள்ளாா்.

அப்போது, தோட்டத்துக்குள் நுழைந்த தெருநாய்கள் கூட்டம், ஆடுகள், கோழிகளை கடித்துக் குதறின. இதில், 6 ஆடுகள், 7 கோழிகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தும்பலப்பட்டி கால்நடை மருத்துவா் கண்ணபிரான்,

காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் செளந்தர்ராஜன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: குண்டடம் உள்ளிட்ட பகுதி கோழிப் பண்ணைகளில் வைரஸ் தாக்கி இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சிலா் பொது இடங்களில் வீசிச் செல்கின்றனா்.

அவற்றை உண்டு பழக்கப்பட்ட தெருநாய்கள், இறந்த கோழிகள் கிடைக்காத நிலையில் தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளைக் கடித்து கொன்று வருகின்றன.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் கருவிகள் அமைக்காத பண்ணை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

பல்லடத்தில் தபால் நிலையம் மூலம் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் பாஜக நகர துணைத் தலைவா் காா்த்திகேயன், செயலாளா்கள் ஜெயசீலி, கிரிபிரபு உள்ளிட்டோ... மேலும் பார்க்க