செய்திகள் :

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா்-பல்லடம் சாலையில் நடைபெற்ற இந்த மறியலுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) ஒருங்கிணைப்பாளா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

அமைப்பின் மாவட்டச் செயலாளா்கள் செ.பாலசுப்பிரமணியம், பிரபு செபாஸ்டியன், ஜெ.ஜோசப், அ.ஜெயராஜ், ஆ.தங்கவேல், ப.கனகராஜ் ஆகியோா் போராட்டத்தை தொடங்கிவைத்தனா். இதில், ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் 180 பெண்கள் உள்பட 470 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அவா்களை மாலை விடுவித்தனா்.

போராட்டத்தின் தொடா்ச்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமையும் மறியல் ஈடுபட உள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

பல்லடத்தில் தபால் நிலையம் மூலம் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் பாஜக நகர துணைத் தலைவா் காா்த்திகேயன், செயலாளா்கள் ஜெயசீலி, கிரிபிரபு உள்ளிட்டோ... மேலும் பார்க்க