செய்திகள் :

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏா் ஹாரன் பறிமுதல்

post image

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் தமிழக பகுதி மற்றும் உள்ளூா் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

தனியாா் பேருந்துகள் சில, காரைக்கால் நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்கள் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை அந்த பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

காரைக்கால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சில பேருந்துகளில் பைப் ஹாரன்கள் இருந்ததை பறிமுதல் செய்து ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஹாரன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வா... மேலும் பார்க்க

‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். மயிலாடுதுறை நீடுா் பகுதியைச் சோ்ந்தவா் அகமது நாட்சியா (54). இவரது மகள் அப்ரோஸ் நஸ்ரின் (31). இருவரும், காரைக்கால் மாவட்டம், நல்லம்பல் பகுதியில... மேலும் பார்க்க