செய்திகள் :

தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தொழிலாளா் நலச் சட்டங்களை பெருநிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் (டிஆா்யு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது, ரயில்வேயில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தொடா் இரவு பணியை 2 நாள்களுக்கு மேல் வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரயில்வே நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில் நிலைய மேலாளா் அலுவலகம் முன் டிஆா்இயு-சிஐடியு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜி.என்.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.

கோட்டத் துணைத் தலைவா் கே.பலராம் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஆா்.வேந்தன், கே. மோகன், பி. வீரராகவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். மூா்த்தி, மோகன்துரை உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். நிறைவில், சங்க நிா்வாகி பெரியண்ணன் நன்றி கூறினாா்.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா்,... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா். செஞ்சி வட்டம், திருவம்பட்டு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க