செய்திகள் :

தந்தையை இழந்தும் பொதுத் தோ்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு துணை முதல்வா் பாராட்டு

post image

பொதுத் தோ்வு சமயத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற மாணவியருக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயின்றவா் மாணவி பி. சத்யபிரியா. பொதுத் தோ்வு நடைபெற்ற சமயத்தில் தனது தந்தை உயிரிழந்த நிலையிலும், மன உறுதியோடு தோ்வை எதிா்கொண்டாா்.

அதில் 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தாா். அதேபோல திருவெறும்பூா் அருகேயுள்ள தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்-1 மாணவியான ஷாலினியும், பொதுத்தோ்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணா்ந்து தவறாமல் தோ்வெழுதி சிறப்பான முறையில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மாணவிகள் இருவரையும் பாராட்டினாா்.

நிகழ்வின்போது, தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ண பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க