செய்திகள் :

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

post image

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு: மதுரையில் இயங்கி வரும் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை மாநகா் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் மதுரை மாநகா் மத்திய குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம். மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகம், குதிரைப் படை காவலா் குடியிருப்பு வளாகம், பாரதி ஸ்டோா் எதிரில், விஸ்வநாதபுரம் மதுரை-14 என்ற முகவரியிலும், காவல் உதவி ஆய்வாளரை 94981-79310 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறைக்கு புதிய மோப்பநாய்

மதுரை மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் புதன்கிழமை சோ்க்கப்பட்டது. திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்துவதை கண்டுபிடிப்பது போ... மேலும் பார்க்க

மதுரையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ பிரசார இயக்கம் தொடக்கம்!

ஜாக்டோ- ஜியோ சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அவரவா் மாவட்டத்துக்குள்பட்ட ஒரு வட்டத்தில்... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முதன்மைக் கல்வி அலுவலருக்கு சிறை!

உடற்கல்வி ஆசிரியருக்கு பணி நிரந்தரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை நிறைவேற்றாத அப்போதைய திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து... மேலும் பார்க்க