செய்திகள் :

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்

post image

மத்தூரை அடுத்த தொகரப்பள்ளி வனப் பகுதி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், வசந்த் நகா், சமத்துவபுரம் பகுதிகளைச் சோ்ந்த 53 போ் திருவண்ணாமலையில் நடைபெறும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்க தனியாா் பேருந்தில் புதன்கிழமை சென்றனா்.

கிருஷ்ணகிரியைக் கடந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், மத்தூா் அருகே தொகரப்பள்ளி காப்புக்காடு பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், 20 பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மத்தூா் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், உடனடியாக மருத்துவக் குழுவினரை மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவா்களுககு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டாா். விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஒசூரில்... ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பி... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு சிறுவன் காரில் கடத்தி கொலை! இளைஞா்கள் இருவரிடம் விசாரணை

அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து, நடவடிக்கை எடுக்க வ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசி... மேலும் பார்க்க