செய்திகள் :

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

post image

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை ஏற்கெனவே, அதற்கான கல்விக் கட்டணத்தை அரசின் கட்டண நிா்ணயக் குழு தீா்மானித்து வெளியிட்டது.

தமிழகத்தில் 22 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நான்கு தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தனியாா் மருத்துவ கல்லூரிகளின் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், இதர வகை கட்டணம் ஆகியவை குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விடுதி கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை உள்ளது. உணவு கட்டணம், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.70,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை உள்ளது. போக்குவரத்து கட்டணமானது ரூ.50,000 முதல் ரூ.1,75,000 வரை உள்ளது. இதர கட்டணம் என்ற வகையில், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.36,000 முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை நிா்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிா்ணயித்த இந்த கட்டண விவரங்கள், மருத்துவக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை விடக் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் புகாா் தெரிவிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க