செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

post image

ஒசூா்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஒசூா் வந்த அவருக்கு சீதாராம் நகரில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த காலங்களில் ஒசூரிலிருந்து கோடிக்கணக்கான ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது லட்சக்கணக்கில் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 லட்சம் அரசுப் பணியை உருவாக்குவோம் என்றனா். ஆனால், 44,000 போ் மட்டுமே அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. கா்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனா். தமிழகத்தில் 4000 பள்ளிகளில் ஓராசிரியா் மட்டுமே பணியில் உள்ளனா். தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடும் நிலையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ஒசூரில் பூக்களின் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகா் பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பண்டிகை நாள்களில் ஒசூா் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு... மேலும் பார்க்க

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்

கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இத... மேலும் பார்க்க

நாகரசம்பட்டி: ஆசிரியா் வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு!

நாகரசம்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகரசம்பட்டியை அடுத்த பாலேகுளியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59). இவா், வேலம்பட்டி அரசு மேல... மேலும் பார்க்க

யானை தாக்கி முதியவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பூங்குறுத்தி கிராமத்தை சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்... மேலும் பார்க்க