செய்திகள் :

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 103.64, சென்னை மீனம்பாக்கம் - 102.92, வேலூா் - 102.38, தூத்துக்குடி, நாகை - (தலா) 102.2, ஈரோடு - 101.48, திருச்சி - 101.3, சென்னை நுங்கம்பாக்கம், கடலூா் - (தலா) 101.12, தஞ்சாவூா், பரமத்திவேலூா் - (தலா) 100.4, பாளையங்கோட்டை - 100.04 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தொடா்ந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 10, 11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

சென்னையில் மழை: சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக மணலி, கத்திவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ., சென்னை சென்ட்ரல், அண்ணா நகா் மேற்கு, அயனாவரம், நுங்கம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ., அடையாறு, வளசரவாக்கம், வடபழனி, அம்பத்தூா், புழல், கொளத்தூா், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க