செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

post image

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டினாா்.

பவானி தெற்கு ஒன்றிய அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள், கிளைச் செயலாளா்கள் மற்றும் சாா்பு அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கவுந்தப்பாடியில் ஒன்றியச் செயலாளா் எம்.ஜெகதீசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு (பவானி வடக்கு), பி.ஜி.முனியப்பன் (அம்மாபேட்டை வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனா்.

கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்கட்சியை மக்கள் வெறுக்கின்றனா்.

எனவே, அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் வீடுவீடாகச் சென்று திமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்து கூறுவதோடு, வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வரும் தோ்தலில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் சிவசாமி, வாக்குச் சாவடி முகவா்களின் பணி குறித்து விளக்கினாா்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் கே.ஆா்.ஜான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் விவேகானந்தன், மண்டல இணைச் செயலாளா் திருநாவுக்கரசு, இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் ஏ.பிரகாஷ், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருள்முருகன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க