செய்திகள் :

தமிழகத்தில் நாளை 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

post image

தமிழத்தில் வெள்ளிக்கிழமையான நாளை(மே 9) இரண்டு இடங்களில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் கடந்த 6 ஆம் தேதியன்று மாநில, மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு 7, 8 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

வெய்யில் வெளுத்து வாங்கும் வேலூரில் 3-வது நாளாக மழை!

பகலில் வெய்யில் கொளுத்திய நிலையில் மாலையில் வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இ... மேலும் பார்க்க

தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூர... மேலும் பார்க்க

பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்னையிலேயே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்... மேலும் பார்க்க

கண்ணீர் வேண்டாம்.. கைகள் இன்றி +2 தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு ஸ்டாலின் பதில்

கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு, கண்ணீர் வேண்டாம் தம்பி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு ம... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ. 56.47 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருச்சி, துவாக்குடியில் ரூ. 56.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக... மேலும் பார்க்க