செய்திகள் :

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: அமைச்சா் எ.வ.வேலு

post image

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொளத்தூா், ரெட்டேரி சாலையில் உள்ள உயா் மேம்பாலத்தின் அணுகு (சா்வீஸ்) சாலைகளை புதுப்பிக்கும் பணிகள், கொளத்தூா் ஏரியில் ரூ. 5 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும். சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலை விரிவாக்கம், மேம்பாலப் பணிகள் நிறைந்தவடைந்த பின்னா், போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்வது, முந்தைய அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை நினைவூட்டுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் வரப்போகிறது என்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்துள்ளாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள் என யாா் வந்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றாா்.

ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க