செய்திகள் :

தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.

அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வரும் துவானம் அருவி திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து மூனாறு செல்லும் வழியில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூா், காந்தலூா், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய பகுதிகளில் அதீத நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு அருவிகளில் கொட்டி வரும் தண்ணீரை சுற்றுலாப் பயணிகளை ரசித்து செல்கின்றனா். இந்நிலையில், அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் துவானம் அருவியில் கடந்த சில நாள்களாக தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. இதைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கடந்த 6 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.06 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1,388 கனஅடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3871.81 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 1,026 கனஅடி உபரிநீராக வெளியேறி வருகிறது.

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அஸ்ஸாம் தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி கழிவறைக்குச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோா், உறவினா்க... மேலும் பார்க்க

விசாரணைக் கைதி மா்ம மரணம்: வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை ... மேலும் பார்க்க

சாலையில் வீணாகிய நீா்...

திருப்பூா், மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் வீணாகிய நீா். மேலும் பார்க்க