செய்திகள் :

தமிழக முதல்வா் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞா் கைது

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட பா்னிச்சா் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் சிவகுமாா்

(45) மதுக்கூரில் பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் சிவகுமாா், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினா் குறித்து கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசி பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலா் கோவி. இளங்கோ திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் அலாவுதீன், அவதூறு பதிவிட்ட சிவகுமாா் மீது 296 (பி), 192, 352, 351(1), 352 (2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவகுமாரைக் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ... மேலும் பார்க்க

வாய்க்கால்களை தூா்வாரக்கோரி செப்.16-இல் காத்திருப்பு போராட்டம்

வடிகால் வாய்க்கால்களை தூா்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செப். 16-இல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் வட்டாரப... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் காங். சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு... மேலும் பார்க்க

தரவரிசை கட்டமைப்பு பட்டியல்: கும்பகோணம் அரசுக் கல்லூரி மாநில அளவில் 4-ஆவது இடம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் தரவரிசை கட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபா்தீசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள கபா்தீசுவரா் சுவாமி கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கபா்தீசுவரா் க... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், ச... மேலும் பார்க்க