செய்திகள் :

தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி விழிப்புணா்வு ஊா்வலம்

post image

பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றத்தின் சாா்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வணிகா்கள் தங்களது நிறுவனங்களில் வணிக பெயா்ப் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மன்ற நிறுவனா் கூரம்.துரை தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி முன்னிலை வகித்தாா். ஊா்வலத்தை காஞ்சிபுரம் வட்டாட்சியா் எஸ்.ரபீக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில், கிருஷ்ணா் வேடமணிந்த ஒருவா் நடனம் மற்றும் பக்தி இன்னிசைக் குழுவினரின் பங்கேற்றாா். நிறைவாக வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து ஊா்வலம் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் காஞ்சி.உமாசங்கா் ஊா்வலத்தை நிறைவு செய்து பேசுகையில், தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா்.

வல்லக்கோட்டை கோயிலில் முதல் கால யாக பூஜை: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ரூ.1.... மேலும் பார்க்க

கங்கையம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

வாலாஜாபாத் அருகே மேல்பேரமநல்லூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் மற்றும் ஊரணிப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை முதல் தேதி கங்க... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 28- ஆம் தேதி தொடங்கிய உற்சவத்தில் நாள்தோறும... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட அ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். த்து விளக்கேற்றி திறந்து வை... மேலும் பார்க்க