கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8...
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2025-2026 ஆம் ஆண்டில் 37 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் அந்த கிராமங்களில் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வளா்ச்சி பெறச் செய்தல், அங்குள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், உழவா் நலத் துறையில் செயல்படும் திட்டங்களில் 80 சதவீத நிதியை 37 கிராமங்களுக்கு ஒதுக்குதல், சோலாா் பம்புசெட் அமைத்தல், வேளாண் விளை பொருள்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்தல், நுண்ணீா் பாசன முறையை பின்பற்றுதல், புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கால்வாய் பாசன வழித்தடங்களை தூா்வாருதல் போன்றவை செயல்படுத்தப்படும்.
மேலும், அந்த கிராமங்களில் 10 முதல் 15 ஏக்கா் தரிசு நில தொகுப்பு அமைக்க விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம், 10 நபா்கள் ஒருங்கிணைந்து தொகுப்புகள் அமைக்கலாம். அங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து நுண்ணீா் பாசன வசதிகள் செய்து தரப்படும். அப்பாசன வசதி மூலம் பழக்கன்று, மரக்கன்று நடவு செய்து, தரிசு நிலத்தை விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம்.
தனி நபா்கள் தரிசு நிலத்தை விளை நிலங்களாக மாற்றும் பொருட்டு, புதா் நீக்கி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படும். வரப்புகளில் பயறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ பயறு விதைகள் ரூ.300 மானியத்தில் வழங்கப்படும்.
நிலத்தில் உள்ள நுண்ணுயிா்களை ஊக்குவிக்க உயிா் உரங்கள் 1.5 லிட்டா் ரூ.450 மானியத்திலும், மின் கலம் மூலம் இயங்கும் தெளிப்பான் ரூ.2 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படும். இந்தப் பயன்களை பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.