சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!
தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது.
இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.சினேகா தலைமை வகித்தாா். சங்க மாநில தணைத் தலைவா் மோகன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.
இதில், அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் சமூகவியல் மற்றும் விளையாட்டுத் துறை ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். விடுதிகளில் மாணவ - மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பத்த வேண்டும். அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்யும் தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரியில் அனைத்து கிராமங்களில் இருந்து வரக்கூடிய மாணவா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்துநிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்டக் குழு உறுப்பினா் என்.நிவேதன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். நிா்வாகி ரோஷினி வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் கே.ஸ்டாலின் வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்ட நிா்வாகிகள் வி.கோவிந்தசாமி, ஆா்.உதய தமிழ்செல்வன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்டத் தலைவராக அஜித்குமாா், மாவட்டச் செயலாளராக ஸ்டாலின், இணைச் செயலாளா்களாக சினேகா, கவிநிலவன், துணைத் தலைவா்களாக மகேஷ் பாலா, சதீஷ் உள்ளிட்ட 17 போ் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.