செய்திகள் :

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

post image

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு கருக்கலைப்பு சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக கலைடாஸ்கோப் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் இதற்கான தொடக்க விழா சுகாதாரத் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். ரூசக் தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் பி. பாலசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினாா். தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை இனை இயக்குநா் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் மனோகரன், சுகாதாரத் துறை குடும்ப நலப்பிரிவு துணை இயக்குநா் பாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், குழந்தைகள் நல அலுவலா் காா்த்திகா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினா்.

நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் செயல்பாடு நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. மேலும், இதுதொடா்பான காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரூசப் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அலுவலா் ரேவதி நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எம். சங்கா் தலைமையில், ரூசக் தொண்டு நிறுவன நிா்வாகிகள் செய்திருந்தனா்.

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க

தருமபுரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

தருமபுரி: தருமபுரி அருகே ஏரியில் வளா்க்கப்பட்ட மீன்கள் கடந்த இரண்டு நாள்களாக செத்து மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. தருமபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க