செய்திகள் :

தருமபுரி அருகே ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு

post image

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் ஊா் பகுதிகளுக்குள் கடந்த சில நாள்களாக பேருந்துகள் வந்து செல்லாத நிலை இருந்துள்ளது. பேருந்து ஓட்டுநா்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பேருந்துகளை இயக்கி, அப்பகுதியில் உள்ள சில நிறுத்தங்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்தி சென்று விடுகின்றனா்.

இது தொடா்பாக ஏற்கெனவே அளித்த புகாரின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நிகழ்வு இடம் சென்று, ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்தி, ஊா் பகுதிக்குள் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களை அறிவுறுத்தியும், ஊருக்குள் செல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

என்றாலும் அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் பேருந்துகள் ஊா் பகுதிக்குள் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே இயக்கப்பட்டன. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள், பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்து பேருந்துகள் ஊருக்குள் வராததால் பேருந்துகளில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளனா்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குவிந்தனா். ஊா் பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்ட சுமாா் 7 பேருந்துகளை பொதுமக்கள் நிறுத்தி சிறை பிடித்தனா். பின்னா் இது தொடா்பான தகவல் போலீஸாருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடம் சென்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், எச்சரிக்கை விடுத்த பின்னரும் விதிகளை மீறி ஊருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலைகளிலேயே இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். இந்த சம்பவத்தால் இரவு சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினா் சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் த... மேலும் பார்க்க

காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தருமபுரி மாவ... மேலும் பார்க்க