செய்திகள் :

World Record: '17 நாள்கள், 170 மணி நேரம்' - பரத நாட்டியத்தில் புதிய சாதனை படைத்த கல்லூரி மாணவி

post image

7 நாள்கள், 170 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த செயிண்ட் அலோஷியஸ் கல்லூரியின் 20 வயது மாணவி ரெமோனா எவெட் பெரெய்ரா, உலக சாதனை படைத்துள்ளார்.

Remona Evette Pereira
Remona Evette Pereira

13 ஆண்டுகளாக தனது குரு ஸ்ரீவித்யா முரளிதரிடம் முறையாக பரதநாட்டியம் பயின்ற இவர், கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை, 15 நிமிட இடைவேளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடனமாடி, கோல்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

விநாயகர் பாடலில் தொடங்கி துர்கை அம்மன் பாடல் வரை காவிய முகபாவனைகளுடன் ரெமோனா பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ரெமோனா, ஜெபமாலை அணிந்துகொண்டு கணபதி பாடலில் தொடங்கிப் பல பாடல்களுக்கு முகபாவங்களுடன் நடனமாடியுள்ளார்.

மங்களூரின் பிஷப் பீட்டர் பால் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Remona Evette Pereira
Remona Evette Pereira

தனது 170 மணிநேர சாதனை ஒரு நடன நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், தனக்கே ஒரு தவநிலைபோன்ற அனுபவமாக இருந்ததாகவும் இந்திய இளைஞர்களுக்குப் பரதநாட்டியம் ஒரு முன்னேற்றத்தின் அடையாளமாக அமையக்கூடும் எனவும் ரெமோனா கூறியுள்ளார்.

கல்லூரி இறுதி ஆண்டு படிப்புடன் பல மாதங்கள் தினமும் சுமார் 6 மணி நேரம் நடனப்பயிற்சி செய்து, 170 மணிநேரம் தொடர்ந்து தனது சலங்கை ஒலியை ஒலிக்கச் செய்தார்.

பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால்புரஸ்கார் (2022) விருது பெற்றிருக்கிறார். இந்தியா சாதனைப் புத்தகத்தில் முன்பே இடம் பெற்றிருக்கிறார் ரெமோனா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``அப்பனுக்கு பனை ஓலையில பைத்தியம்ன்னு என் மகன் சொல்லிட்டு திரியிவான்'' - ஓலை கலைஞர் பால்பாண்டி

பனை ஓலையில் எழுதலாம்.... பனை ஓலையாலேயே எழுதலாமா? - ரெக்கார்ட் அடித்த தூத்துக்குடி பனை ஓலை கலைஞர்.குறுக்குப்பிடி குணப்படுத்துவது, சுளுக்கு தடவுவது, விஷக்கடிக்கு வைத்தியம் பார்ப்பது போன்றவற்றில் கிடைக்க... மேலும் பார்க்க

எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23

‘கண்ணில் ஒரு கொக்கியைப் போல்நீ என்னுள் பொருந்துகிறாய்ஒரு மீனின் கொக்கிஒரு திறந்த கண்’‘You fit into me’ என்ற கனடியக் கவிஞர் மார்கரெட் அட்வுட்டின் குறுங்கவிதை. கண்ணிலொரு தூசு விழுந்தாலே தாங்கமுடியாது; ஆ... மேலும் பார்க்க

Velpari: "எழுத்தாளர்கள் வேள்பாரி போன்ற படைப்புகளைக் கொடுக்க வேண்டும்" - முதலமைச்சர் வாழ்த்து

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) சு.வெங்கடேசன் எழுத்தில் விகடன் பிரசுரம் வெளியிட்ட வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழா கொண்டாடடப்பட்டது. சு.வெங்கடேசனின் சாதனைக்காக பல ... மேலும் பார்க்க

பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 20

பர்மியக் கவிதைகள் தனது வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்புடன் நேரடித் தொடர்புடையவையாக இருந்தன. மேற்கத்திய நாடுகளில் நம்பமுடியாத அரசியல் சுழற்சி, பெ... மேலும் பார்க்க