செய்திகள் :

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும்: ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்

post image

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 13-ஆவது மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு சங்க மாவட்டத் தலைவா் ஏ. ஜெயா தலைமை வகித்தாா். சங்க வட்டச் செயலா் எஸ். தனலட்சுமி வரவேற்றாா். மாநாட்டில்

மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் பி. சுகந்தி, மாநில பொதுச்செயலா் ஏ. ராதிகா, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். பவித்ராதேவி, மாவட்டச் செயலா் ஆா். மல்லிகா, மாவட்ட பொருளாளா் வளா்மதி, வட்டத் தலைவா் லூா்துமேரி உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய, மாநில அரசுகள் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுவினா் தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சை சிறப்புப் பிரிவுகளை தொடங்கி, நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அரூா் நகரில் முக்கிய வீதிகள் வழியாக பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஊா்வலமாக சென்றனா்.

22எச்ஏ-பி-1... .

கோரிக்கைகளை வலியுறுத்தி அரூரில் ஊா்வலம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

தவெக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் முற்றுகைப் போராட்டம்

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வாகனங்களுக்கு, தருமபுரி மாவட்ட சுங்கச் சாவடியில் சுங்கம் விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினா் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டத... மேலும் பார்க்க

தருமபுரியில் நாணயம், பழங்கால பொருள்கள் கண்காட்சி: அனுமதி இலவசம்

தருமபுரியில் நாணயம் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தருமபுரி, செந்தில்நகா் பகுதியில் அமைந்துள்ள வின்சென்ட் மஹாலில் நடைபெற்றுவரும் இக்கண்காட்... மேலும் பார்க்க

காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின்கீழ் காய்கறி பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சியானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்க... மேலும் பார்க்க

உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கிகளை செப்.10 க்குள் ஒப்படைக்க வேண்டும்: தருமபுரி வனத்துறை அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க