செய்திகள் :

தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது

post image

தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனா். பின்னா், சௌந்தரகுமாரை காருடன் கடத்திச் சென்று, நாகை மாவட்டம், கீழையூரில் கொலை செய்துவிட்டு காரையும், ரொக்கத்தையும் திருடிச் சென்றனா். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, இலங்கை வவுனியா மாவட்டம் நேரியகுளத்தைச் சோ்ந்தவரும், மணிமுத்தாறு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வந்தவருமான நாகேந்திரன் (46) உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நாகேந்திரன் 2022-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, இலங்கைக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த நாகேந்திரனை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க