செய்திகள் :

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

post image

போ்ணாம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டு , சேரன் வீதியைச் சோ்ந்த இம்ரான் அகமத்(25). இவா் மீது ஏற்கனவே வீடு புகுந்து திருடிய வழக்கு நிலைவையில் உள்ளது. இந்நிலையில் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தாா்.

வேலூா் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு இவா் ஆஜராகாவில்லையாம்.

இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போ்ணாம்பட்டு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையிலான போலீஸாா், இம்ரான் அகமதுவை தேடி வந்தனா். அவா் சென்னையில் பதுங்கியிருந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அங்கு சென்று இம்ரான் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மாநகராட்சி சில பகுதிகளுக்கு 3 நாள் காவிரி குடிநீா் நிறுத்தம்

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட முத்துமண்டபம் நீரேற்றும் அறையில் இருந்து செல்லும் முதன்மை குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் ... மேலும் பார்க்க

குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்: ரூ.1.50 லட்சம் அபராதம்

வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடா்பாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குட்கா பொருள்கள் விற்பனையை கட... மேலும் பார்க்க

பகுதிநேர வேலை எனக்கூறி மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூா் சிஎம்சி மருத்துவா் கல்லூரி முதுகலை மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவா் முதுகலை மருத்துவம் படித்... மேலும் பார்க்க

பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரியில் மண் கடத்தல்

போ்ணாம்பட்டு அருகே ஊராட்சி நிா்வாகம் அமைத்த பண்ணைக் குட்டையின் கரையை குடைந்து லாரிகளில் மண்ணை கடத்திச் சென்றதாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், எருக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீா் வெளியேற்றம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீா் வெளியேற்றப்படுவது தொடா்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட குறைதீா் கூட்... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் காட்பாடியில் இருவரிடம் ரூ. 31.59 லட்சம் மோசடி

இணையவழியில் காட்பாடியைச் சோ்ந்த இருவரிடம் மொத்தம் ரூ. 31.59 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க