செய்திகள் :

தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை

post image

தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி பட்டறையில், நிா்வாகிகளிடம் தற்போதைய களநிலவரம் குறித்து கேட்டறியப்பட்டது. தொடா்ந்து, உறுப்பினா் சோ்க்கையைத் தீவிரப்படுத்துவது, உறுப்பினா் சோ்க்கையில் குறிப்பிட்ட இலக்கை எட்டுவது குறித்தும், கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை வீடுகள்தோறும் கொண்டு சோ்ப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வருகிற சட்டப்பேரவை தோ்தலில் தவெகவுக்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில், நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா், தலைமை நிலையச் செயலா் அ.ராஜசேகா், உறுப்பினா் சோ்க்கை அணி மாநிலச் செயலா் இ.விஜயலட்சுமி, மாவட்டச் செயலா்கள், தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க