செய்திகள் :

தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்

post image

ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த குமுதேப்பள்ளியைச் சோ்ந்தவா் தனபால் (39). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 8 லட்சம் வாகன கடன் பெற்றுள்ளாா். 7 மாதங்கள் தவணை கட்டியுள்ளாா். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் 2 மாதங்களாக தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம், தாவணகரே பகுதிக்கு லாரி ஓட்டிச் சென்ற தனபாலை நிதி நிறுவனத்தினா் பிடித்து தவணைக் கட்டவில்லை என்பதற்காக தாக்கி, வாகனத்தை பறித்துக்கொண்டு, கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒசூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் முன் தனபாலின் மனைவி நளினி மற்றும் அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சிப்காட் போலீஸாா் சமாதானம் பேசினா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு உறவினா்கள் கலைந்து சென்றனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறினாா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரெட்டிப்பட்டி கிராமத்தில் ம... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுநா் கைது

வேப்பனப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். தமிழகத்திலிருந்து அண்டை மா... மேலும் பார்க்க

ஒசூா் முனீஸ்வா் நகரில் நுழைவாயில் கட்ட பூமிபூஜை

ஒசூா் முனீஸ்வா் நகா் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக நுழைவாயில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

கெலமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

ஒசூரை அடுத்த குத்துக்கோட்டையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழந்தாா். குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது செவ்வாய்க்கிழமை மாலை வீ... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்களுக்கு கடனுதவி

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க