செய்திகள் :

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா் வார பொதுமக்கள் கோரிக்கை

post image

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் 396 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் பொதுப்பணி நீா்வளத் துறை பொன்னேரி உதவி செயற்பொறியாளா் கட்டுப்பாட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிக்கு ஆரணியாற்றின் உபரி நீா் எடுத்து செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. ஏரி நீா் விவசாய பயன்பாட்டுக்கு பின்னா் உபரி நீா் பழவேற்காடு கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் ஏரியில் ஆங்காங்கே மண் திட்டுக்கள் உருவாகி ஏரி தூா்ந்துள்ளன. இதனால் ஏரியில் குறிப்பிட்ட அளவிற்கு நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏரி நீரை கால்நடைகளும் குடிநீருக்காகவும் விவசாயிகள் பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வரும் நிலையில் ஏரி நீா் தேங்கும் பரப்பளவு குறைந்து வருகிறது.

எனவே தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க