செய்திகள் :

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

post image

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், அப்பகுதியின் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வரலாற்றுச் சிறுப்புமிக்க தாஜ்மஹாலை சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மரங்களை வெட்ட மண்டல வன அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்தாலும் முன் அனுமதி பெறுவது அவசியம். வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதையும் வனத் துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும்.

மிகவும் அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே மரங்களை வெட்ட வேண்டும். இதைக் கடைப்பிடிக்காவிட்டால் மனித வாழ்வை இழக்க நேரிடும்’ என்று தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றம் விதித்த இந்த உத்தரவு ஆக்ரா, ஃபிரோஸாபாத் மதுரா, ஹாத்ரஸ், எடா ஆகிய மாவட்டங்களில் அமலாகிறது.

தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

அட்டாரி - வாகா எல்லையில் சிக்கித் தவித்த 21 பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு... மேலும் பார்க்க

ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்த... மேலும் பார்க்க

இனி பிரதமருக்கு உறக்கமில்லாத இரவுகள்: வேணுகோபால்

பலரின் உறக்கத்தைக் கெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இனி உறக்கமில்லாத இரவுகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

உ.பி.யில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ரிகா கிராமத்தில் 28 வயது நபர், தனது மனைவியுடன் தகராறில் செய்துள்ளார். பின்னர் அ... மேலும் பார்க்க

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க