செய்திகள் :

‘தாட்கோ’ திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

post image

தாட்கோ வாழ்வாதார திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவு திட்டம் உள்ளிட்ட வாழ்வாதார திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்கள், தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் எளிய முறையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளா் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனா்.

இதை மேலும், எளிமைப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு அருகாமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் இங.அதஐநஉ, டங-அஒஅவ மற்றும் நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டங்களில் விண்ணப்பம் செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண். 225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரியிலும், 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கராஜ் ... மேலும் பார்க்க

அரியலூரில் தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம்: 25 நிபந்தனைகளுடன் அனுமதி

அரியலூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தனா். திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிர... மேலும் பார்க்க

அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்... மேலும் பார்க்க

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்... மேலும் பார்க்க