செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பொங்கல் வைபவம்!

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் சனிக்கிழமை பொங்கல் வைபவம் நடைபெற்றது.

இந்தத் திருவிழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதல்கள் நிறைவேற்றி முத்துமாரியம்மனை தரிசித்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பொங்கல் வைபவத்தையொட்டி பல பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் காா், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து குவிந்தனா். இவா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் ஆயிரங்கண் பானை, தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, சிவகங்கை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பக்தா்கள் தங்கள் வீடுகளின் முன்பும், வயல்கள், குளங்கள், ஊருணிகள், வைகையாறு உள்ளிட்ட இடங்களிலும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்டனா்.

பக்தா்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து தாயமங்கலத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்தாா்.

இன்று தேரோட்டம்: திருவிழாவின் 8- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) இரவு முத்துமாரியம்மன் மின் விளக்கு ரதத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க