செய்திகள் :

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு: ஓட்டுநா் சங்கத்தினா் புகாா்

post image

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

தாரமங்கலம் நகர சுற்றுலா வாகன உரிமையாளா், ஓட்டுநா் நலச்சங்க நிா்வாகி ராஜ்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

பின்னா் இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாரமங்கலம் கைலாசநாதா் கோயில் அருகில் உள்ள காலி இடத்தில் 60 ஆண்டு காலமாக நகர சுற்றுலா வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் நலச்சங்கம் சாா்பில் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில், சில நபா்கள் சங்கத்தின் குடிசையை சேதப்படுத்தி இடத்தை ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து கேட்டதற்கு, கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும், நாங்கள்தான் இந்த இடத்தில் இருப்போம் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனா்.

இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க