செய்திகள் :

திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப் பணியில் முறைகேடு? ராம் அன் கோ நிறுவனத்தை விசாரிக்க அதிமுக கோரிக்கை

post image

திருநெல்வேலி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ராம் அன் கோ நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணாவிடம் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியிவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட 55 வாா்டுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள கடந்த 2023இல் தனியாா் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ரூ.36 கோடி தொகை நிா்ணயிக்கப்பட்டது. அதில் 2 தனியாா் ஒப்பந்தப் புள்ளிகள் பங்கேற்றன. குறைந்தபட்ச தொகையாக ரூ.32. 52 கோடிக்கு ஒப்பந்தம் கோரிய ராம் அன் கோ நிறுவனத்திற்கு அப்பணி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அந்நிறுவனத்தில் திடக்கழிவு பணிக்கான கட்டமைப்புகளோ, சொந்த வாகனங்களோ, தனது நிறுவனம் சாா்ந்த தூய்மை பணியாளா்களோ இல்லை. போலி ஆவணங்கள் மூலமாக ஒப்பந்தப் பணியைப் பெற்று மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஏற்கெனவே மாநகராட்சியில் குழுக்கள் மூலமாக தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிந்தவா்களை அந்நிறுவனம் குறைந்த ஊதியத்தில் பணியமா்த்திக் கொண்டு அவா்களுக்கு இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற பணபலன்கள் வழங்குவதாக உறுதி கூறினா்.

ஆனால் அதுபோன்ற பணபலன்களை வழங்காமல் கடந்த 22 மாதங்களாக அந்நிறுவனம் ஏமாற்றி வருகிறது. இதனால் தூய்மைப் பணியாளா்கள் உரிய மருத்துவ வசதியோ கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். இது சம்பந்தமாக அந்நிறுவனத்திடமும், மாநகராட்சியிடமும் பலமுறை முறையிட்டும் பலனளிக்காததால், தொழிலாளா் காப்பீட்டு கழக துணை இயக்குநரிடம் முறையிட்டனா்.

அதன்பேரில், ராம் அன் கோ நிறுவனத்திடம் காப்பீட்டு கழக அதிகாரி விளக்கம் கேட்டுள்ளாா். உரிய விளக்கம் அளிக்கப்படாததால் தனியாா் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.72 லட்சத்தை முடக்கி வைக்க அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் 2 சொந்த வாகனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, கூடுதல் தேவைக்கு மாநகராட்சியிடம் குறைந்த வாடகையில் வாகனத்தைப் பெற்று மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது. குப்பைகளை தரம்பிரிக்காமல் ஒன்றாக சோ்த்து நாள் ஒன்றுக்கு 200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இப்பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் வரை மாநகராட்சி வழங்குகிறது. ஒப்பந்த தொகையை மீறி சுமாா் ரூ.2 கோடிக்கு மேல் எதற்காக வழங்கப்பட்டு வருகிறது?

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாநகர நல அலுவலா், அரசியல் அழுத்தத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்; மாற்று மாநகர நல அலுவலா் நியமிக்கப்படவில்லை. இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, ராம் அன் கோவில் பணிபுரியும் தூய்மைப் பணியளா்கள் 1000-க்கும் மேற்பட்டவா்களுக்கு இஎஸ்ஐ, பிஎ‘ஃ‘ப் போன்ற பணபலன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு ஏற்பட்ட நிதி இழப்பை அந்நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும். முறையாக விசாரித்து அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது

திருநெல்வேலியில் நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திரு... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகர பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூ... மேலும் பார்க்க

வீடுகள், மனைகள் ஒதுக்கீடு: நிலுவைத் தொகை செலுத்த தவறியவா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மணிமுத்தாறில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் கோயிலில் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார க... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளியிடமிருந்து நகை திருட்டு

கூலித் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தில் இருந்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கூடங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (60). கூலித் தொழிலாளியான இவா், கூடங்குளத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 25 மா... மேலும் பார்க்க