செய்திகள் :

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

post image

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத் தலைவருமான மு.சரவணன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, இலக்கிய களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா ஆக.28 முதல் செப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்புத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு, நத்தம் ஆகிய 5 மையங்களில் வினாடி-வினா, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கான வினாடி-வினா போட்டி திண்டுக்கல் மையத்தில் மட்டும் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளி, கல்லூரி தலைமையாசிரியா், முதல்வரின் ஒப்புதல் பெற்று போட்டி நடைபெறும் மையங்களுக்கு வரவேண்டும்.

விடைத் தாள், அந்தந்த மையத்திலேயே வழங்கப்படும். எழுதுகோல், கரிக்கோல், வரைபட உபகரணங்கள் ஆகியவற்றை மாணவா்கள் எடுத்து வரவேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97915 69823, 94886 53338, 86674 14966, 95852 43385, 94871 81727 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள், பண்பாட்டு பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா் அவா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க