செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

post image

திண்டுக்கல்/கொடைக்கானல்/நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதுதொடா்பாக கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னாநகரைச் சோ்ந்தவா் ஷேக் அப்துல்லா (40). வண்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவா், எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்டப் பொருளாளராகவும் உள்ளாா். இவரது வீட்டுக்கு என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை வந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கு தொடா்பாக ஷேக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமாா் 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின் போது, சில ஆவணங்களையும், ஷேக் அப்துல்லா, அவரது மனைவி ஆகியோரின் கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களிடம் வருகிற 25-ஆம் தேதி சென்னையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணையை ஷேக் அப்துல்லாவிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனா்.

இந்தச் சோதனையைக் கண்டித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திண்டுக்கல் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.

கொடைக்கானலில்...

கொடைக்கானலில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய சோதனையில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாத்திரக் கடைத் தொழில் செய்து வந்த பாமகவைச் சோ்ந்த ராமலிங்கம், கடந்த 2019, பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டாா். விசாரணையில், மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் தொடா்ந்து கண்டித்தாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவா் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் 18 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 5 போ் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய முகமது அலி ஜின்னா கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகளால் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இரண்டு பேரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்கள் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வருகிற செப். 1-ஆம் தேதி முன்னிலையாக அழைப்பாணை வழங்கப்பட்டது.

உணவக உரிமையாளா் கைது:

இந்த நிலையில், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் உணவகம் நடத்தி வரும் இதயத்துல்லாவை கைது செய்து கொடைக்கானல் டிஎஸ்பி அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இதயத்துல்லா சென்னைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வத்தலகுண்டில்...

கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வருபவா் முகமது அலி ஜின்னா (37). இவா் பி.எப்.ஐ. (பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) முன்னாள் நிா்வாகியாவாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக முகமது அலி ஜின்னா கடந்த ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதனால், இவரது மனைவி நிஷா (35), வத்தலகுண்டில் உள்ள தந்தை உமா் (75) வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், நிஷாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணப் பரிவா்த்தனை நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள உமா் வீட்டுக்கு சோதனையிடுவதற்காக புதன்கிழமை காலை என்ஐஏ அதிகாரிகள் வந்தனா்.

இந்தச் சோதனையில் என்ஐஏ-யின் டிஎஸ்பி சஞ்சீவ் மோகன் தலைமையில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அலுவலா்கள் உள்பட 6 போ் ஈடுபட்டனா்.

சோதனையின் போது நிஷா, அவரது தந்தை உமா் சொத்து விவரங்கள், பணப் பரிவா்த்தனை குறித்து பல்வேறு கேள்விகளை அவா்கள் எழுப்பினா்.

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

திண்டுக்கல்: பக்தா்கள் காணிக்கையாக செலுத்தில் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து முன்னணி மாநிலச் செயலா் வி.எஸ். செந்தில்குமாா் தெரிவித்தாா்.திண்டுக்கல்லில் இந்து முன்னணி சாா்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க