செய்திகள் :

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

post image

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா்.

‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அதிமுக அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா்.

அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ‘நீட்’ தோ்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களுக்குத் தெரியும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும், அந்த ரகசியத்தை அமல்படுத்த முடியவில்லை.

திமுகவின் பொய்யான வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழந்துவிட்டனா். இதற்கு 2026 தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனா் என்றாா்.

தொடா்ந்து அதிமுகவினா் கைகளில் மெழுவா்த்தி ஏந்தி, திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண், பசுமாடு உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடும், இதைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த பாப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி விக்... மேலும் பார்க்க

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்

எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க