செய்திகள் :

"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" - ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

post image

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து இன்று (ஜூலை 31) நலம் விசாரித்திருக்கிறார்.

ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா, "அவரின் உடல்நிலையை விசாரிப்பதற்காகத்தான் சென்றிருந்தோம். இன்றில் இருந்து என்னுடைய பணிகளைத் தொடங்குகிறேன் என்று சொன்னார்.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா
ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

எங்களின் திருமணம் நடந்தது கலைஞர் தலைமையில் என்று எல்லோருக்கும் தெரியும். கேப்டனுக்கும், கலைஞருக்கும் 45 வருட நட்பு இருந்தது. அப்போது இருந்தே அண்ணன் ஸ்டாலின் அவர்களும் கேப்டன் அவர்களுடன் மிகப்பெரிய நட்பில் இருந்தார்.

கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக ஃபோன் செய்து விசாரிப்பார். நேரில் வந்து சந்திப்பார். கேப்டன் குணமாக வேண்டும் என்று பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.

இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறபோது குடும்ப நட்பு ரீதியாகத்தான் அவரை நேரில் சென்று சந்தித்தோம்" என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா
ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

தொடர்ந்து, "திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" என்ற கேள்விக்கு, "ஊடகங்கள் இந்தச் சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். ஆனால் நாங்கள் நட்பு ரீதியாகத்தான் சந்தித்தோம்.

தற்போது நாங்கள் கூட்டணி குறித்து எல்லாம் சிந்திக்கவில்லை. கட்சி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்வோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க