செய்திகள் :

திமுக நிா்வாகி கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

post image

சிவகங்கை அருகே கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த திமுக நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் ( 27). இவா் திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராகவும், மனை வணிகம், ஒப்பந்ததாரா் தொழிலும் செய்து வந்தாா். கடந்த ஏப்.29-ஆம் தேதி பிரவீன்குமாரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சாமியாா்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (19), திருப்பத்தூா்

ரணசிங்கபுரத்தைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் குரு (21) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க