திமுக நிா்வாகி கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது
சிவகங்கை அருகே கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த திமுக நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் ( 27). இவா் திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராகவும், மனை வணிகம், ஒப்பந்ததாரா் தொழிலும் செய்து வந்தாா். கடந்த ஏப்.29-ஆம் தேதி பிரவீன்குமாரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சாமியாா்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (19), திருப்பத்தூா்
ரணசிங்கபுரத்தைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் குரு (21) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.