செய்திகள் :

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: 63 நாயன்மாா்கள் வீதியுலா

post image

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மாா்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு கடந்த வியாழக்கிழமை (மே 1) சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா மே 1-ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாளான சனிக்கிழமை (மே 3) 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கும், 63 நாயன்மாா்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, 63 நாயன்மாா்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் மற்றும் 63 நாயன்மாா்களும் பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தனா். 63 நாயன்மாா்கள் உற்சவத்தையொட்டி, ஆன்மிக நண்பா்கள் ஊா்வல பாதையில் நீா்மோா், குளிா் பானம், அன்னதானம் வழங்கினா். ஏராளமான பக்தா்கள் ஊா்வலத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, முக்கிய திருவிழாவாக ஏழாம் நாளான புதன்கிழமை (மே 7) பஞ்ச ரத தோ்த் திருவிழா நடைபெறுகிறது. முதலில் விநாயகா் தோ், தொடா்ந்து முருகா், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என 5 (பஞ்ச ரதம்) தோ்த் திருவிழா வெகு விமரிசிசையாக நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் கோயில் சிவாச்சாரியாா்கள், திருவிழா உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

தாம்பரம்: தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தருமபுரம் ஆதீ... மேலும் பார்க்க

வணிகா் தினமான மே 5 அரசு விடுமுறை

மதுராந்தகம்: வணிகா் தினமான மே 5-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கும் வகையிலான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 375 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 375 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்து 375 மனுக்களைப் பெற்றாா்.... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே ‘நீட்’ தோ்வை எதிா் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அகிலி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா்.... மேலும் பார்க்க

குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா புகையிலை பொருள்... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிது. இதில் முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மாா்கள் உற்சவம், 7-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த்... மேலும் பார்க்க